Friday, December 19, 2025

Fact Check

அசாம் சிறுவன் மானை ஆற்றிலிருந்துக் காப்பாற்றினாரா?

banner_image

வெள்ளத்தில்  அடித்துச் சென்ற மான் குட்டியை அசாம் சிறுவன் காப்பாற்றியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மைக் குறித்துக் காண்போம்.

அசாம் சிறுவன்
மானைக் காப்பாற்றிய அசாம் சிறுவன் எனக் கூறப்படுபவரின் புகைப்படம்.

Fact Check/Verification

அசாமில் மழைப் பெய்து அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  

இந்த வெள்ளப்பெருக்கில் மான்குட்டி ஒன்று சிக்கியதாகவும், அக்குட்டியை ஒரு சிறுவன் காப்பாற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

உடல் முழுவதும் நீரில் மூழ்கி, தன் ஒற்றைக் கையை மேலேத் தூக்கி மானைத் தாங்கியவாறு இருக்கும் சிறுவனின் புகைப்படங்களைப் பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்

சாகர் அவர்களின் ட்வீட்.

ஆஷா.G.குமார் அவர்களின் ட்வீட்.

ரக்ஷித் ஷிவராம் அவர்களின் ட்வீட்.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

நாம் இதுக்குறித்து கூகுளில் ஆராய்ந்தோம். அப்போது நமக்கு இதுக்குறித்த உண்மைகள் தெரிய வந்தது.

உண்மையில் இந்நிகழ்வானது, அசாம் மாநிலத்தில் நடைப்பெறவில்லை. இந்நிகழ்வானது வங்காளதேசத்தில் நடைப்பெற்றுள்ளது. அதுவும் தற்போது இல்லை, 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்றுள்ளது.

அதாவது, 2017 ஆம் ஆண்டுப் பெய்த கனமழைக் காரணமாக வங்காளதேசத்தில் உள்ள நொக்காலி கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வெள்ளப் பெருக்கில் ஒரு மான்குட்டி சிக்கி அடித்து வந்துள்ளது. இதைக் கண்ட சிறுவன் ஒருவன் தன் உயிரைப் பணயம் வைத்து அம்மான்குட்டியைக் காப்பாற்றியுள்ளான்.

இந்நிகழ்வை  வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார். அப்புகைப்படங்களே தற்போது  சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிகழ்வானது 2017 ஆம் ஆண்டேப் பல இணையத் தளங்களில் செய்தியாக வெளிவந்துள்ளது.

இச்செய்திக் குறித்து hirunews.lk எனும் இணையத்தளம் வெளியிட்டச் செய்தி.

அசாம் சிறுவன்
hirunews.lk இணையத்தளத்தில் வெளிவந்தச் செய்தி

அதேபோல், தீவகம்.காம் எனும் இணையத்தளத்திலும் இதுக் குறித்த செய்திகள் வெளியாயிருந்ததைய நம்மால் காண முடிகிறது.

அசாம் சிறுவன்
தீவகம் இணையத்தளத்தில் வெளிவந்தச் செய்தி

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின் வைரலாகும் புகைப்படத்தில் காணப்படும் நிகழ்வானது தற்போது அசாமில் நிகழ்ந்ததல்ல, 2017 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைப்பெற்றது என்று நமக்குத் தெளிவாகிறது.

Our Sources

Twitter Profile: https://twitter.com/sagarcasm___/status/1284800199500554245

Twitter Profile: https://twitter.com/bkrs100/status/1284387160049639424/

Twitter Profile: https://twitter.com/AshaGKumar1/status/1285404764130275328

Theevakam.com:https://www.theevakam.com/archives/56084

Result: Misleading


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage