Fact Check
போதையில் போலீசாரை பெண் ஒருவர் தாக்கியதாக பரவும் வீடியோவின் உண்மை!
Claim: போதையில் போலீசாரை பெண் ஒருவர் தாக்கியதாக பரவும் வீடியோ
Fact: அப்பெண்ணுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவர் எவ்வித போதை பொருளையும் பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்துள்ளதாக மங்களூர் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. பெண் ஒருவர் பொது இடத்தில் போலீசாரை காலால் எட்டி உதைப்பதையும், போலீசார் அவரை மடக்கி பிடித்து கட்டுப்படுத்துவதையும் அவ்வீடியோவில் காண முடிந்தது.
அப்பெண் போதையில் இவ்வாறு நடந்துக்கொள்வதாக கூறி பலரும் இவ்வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடக் கூறிய அமைச்சர் சேகர் பாபு என்று பரவும் பழைய செய்தி!
Fact Check/Verification
போதையில் போலீசாரை பெண் ஒருவர் தாக்கியதாக வைரலாகும் வீடியோவில் காணப்படும் போலீசார் கன்னடத்தில் பேசுவதை கேட்க முடிந்தது. இதன்படி பார்க்கையில் இச்சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது என அறிய முடிகின்றது.
இதனைத் தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம். அதில் “Drunk’ Girl’s Aggressive Behaviour With Cops in Mangaluru, Medical Check Reveals Plot Twist” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து நியூஸ் 18-யில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை அறிய முடிந்தது.

அச்செய்தியில் போலீசாரிடம் தகராறு செய்த பெண்ணை போலீசார் மருத்துவர் பரிசோதனை செய்ததாகவும், அப்பெண் எவ்வித போதை பொருட்களையும் பயன்படுத்தவில்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளதாக மங்களூர் நகர காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தேடியதில் மங்களூர் நகர காவல்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து பத்திரிக்கைச் செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
வைரலாகும் இச்சம்பவம் செப்டம்பர் 01 ஆம் தேதி மங்களூர் பம்ப்வெல் பகுதியில் நடந்துள்ளது. அப்பெண் தகாத முறையில் நடந்ததை தொடர்ந்து போதை காரணமாக அவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரா என அறிய, சந்தேகத்தின் பேரில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்துள்ளது. அச்சோதனையில் அப்பெண் அப்பெண் போதைப் பொருள் எதையும் உட்கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக மங்களூர் போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,
- வைரலாகும் இச்சம்பவம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்துள்ளது.
- வீடியோவில் காணப்பட்ட பெண் போதை காரணமாக தகாத முறையில் நடந்துக்கொள்ளவில்லை.
Also Read: சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
போதையில் போலீசாரை பெண் ஒருவர் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post from Mangalore City Police, Dated September 09, 2023
Report from News 18, Dated September 12, 2023
Report from English Jagran, Dated September 12, 2023
Report from Free Press Journal, Dated September 11, 2023
Report from Times Now, Dated September 11, 2023
இச்செய்தியானது நியூஸ்செக்கர் கன்னடத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)