Fact Check
கடலூரில் கண்டெய்னரில் கடத்தப்பட்டனவா வாக்குப்பதிவு எந்திரங்கள்?
கடலூரில் கண்டெயனர் லாரி ஒன்றில் தேங்காய் நாரினுள் மறைத்து ஈ.வி.எம் மெஷின்கள் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வைரலாகியது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகின்ற மே 2 ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தொடர்ந்து வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு சாதகமான முடிவுகள் வரலாம் என்று செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், “கடலூரில் பிடிபட்ட EVMs. மிசின் நாரினால் சுற்றப்பட்டு மறைத்து எடுத்து செல்லப்படும் வாக்கு எந்திரங்கள். அரசின் அவலமான போக்கு ….. எப்படியெல்லாம் குறுக்கு வழியில் சென்றாலும் மக்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை” என்கிற பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.







சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
கடலூரில் கண்டெய்னர் லாரி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் பரவிய புகைப்படச் செய்தி குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியதில் அந்த கண்டெய்னர் லாரி கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருத்தாச்சலம் அரசு கொலஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் மூன்றண்டுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த வாரம் அங்கு ஒரு கண்டெய்னர் லாரி நின்றிருந்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த லாரி மீது சந்தேகம் என்று திமுகவினர் அதுகுறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து, லாரி புதுக்குப்பம் என்கிற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விருத்தாச்சலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் திட்டக்குடி திமுக வேட்பாளரான கணேசன் தலைமையில் அந்த லாரியை சிறைபிடித்து அதனை சோதனை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பிரவீன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்துள்ளார். சோதனையின் முடிவில் குறிப்பிட்ட அந்த கண்டெய்னர் லாரி பொள்ளாச்சியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு செல்லப்படும் தேங்காய் நார்கள் இருந்தது தெரிய வந்தது.
எனவே, கண்டெய்னர் லாரிக்குள் தேங்காய் நார்கள் இருந்தது மட்டுமே உண்மை; ஈ.வி.எம் மெஷின்கள் கடத்தப்படவில்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
Conclusion:
கடலூரில் கண்டெய்னர் லாரி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் பரவிய புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading/Partly false
Our Sources:
Puthiyathalaimurai: http://www.puthiyathalaimurai.com/newsview/99816/Virudhachalam-Stir-by-a-container-lorry-parked-near-the-counting-center
Thanthi TV: https://youtu.be/JxPViwQnb-Y
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)