Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் விமான நிலைய ரன்வேயில் பயணிகள் காத்திருப்பதாக பரவும் படம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததா?
இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் விமான நிலைய ரன்வேயில் பயணிகள் காத்திருப்பதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் மே 15, 2018 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அச்செய்தியில் பருவநிலை காரணமாக பெங்களூரிலிருந்து டெல்லிக்கு செல்ல வேண்டிய விமானம் ஏழு மணிநேரம் தாமதாக சென்றதால் பயணிகள் அவதியுற்றதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக மே 14, 2018 அன்று தி எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியிலும் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படத்துக்கும் தற்போதைய இன்டிகோ நிறுவன பிரச்சனைக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
வைரலாகும் இப்படம் ஏழு வருடங்களுக்கு முந்திய பழைய படம் என உறுதியாகின்றது.
Sources
Report by The Times of India, dated May 15, 2018
Report by The Economic Times, dated May 14, 2018