Fact Check
ஜனவரி 18ஆம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதா தமிழ்நாடு அரசு?
பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக ஜனவரி 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தாரா?
Fact check/Verification
ஜனவரி 18ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதனை ஆராய்ந்தோம்.
ஜனவரி 18, புதன்கிழமையன்று பள்ளிகள் விடுமுறை என்று செய்தி பரவியதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, “பொங்கல் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (ஜனவரி 18) பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அரசு சார்பில் அறிவிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
Also Read: தமிழர்களை சிறுபான்மையினர் என்று கூறினாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?
Conclusion
ஜனவரி 18ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Twitter Post From, ABP Nadu, Dated January 16, 2023
YouTube Post From, Polimer News, Dated January 16, 2023
YouTube Post From, News 18 Tamil Nadu, Dated January 16, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)