Fact Check
டிட்வா புயல் மழையால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ளதா?
Claim
டிட்வா புயல் மழையால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்ததாக பரவும் படம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதா?
Fact
டிட்வா புயல் மழையால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்ததாக பரவும் படத்தில் நியூஸ் தமிழ் ஊடகத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை ஆதாரமாக வைத்து நியூஸ் தமிழ் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் படம் குறித்து தேடினோம்.
அத்தேடலில் நியூஸ் தமிழ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் விழுப்புரம் பேருந்து நிலையம் ஏரி போல் காட்சியளிப்பதாக கூறி வீடியோ ஒன்று அக்டோபர் 22, 2025 அன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவின் காட்சியே டிட்வா புயலால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்ததாக பரப்பப்படுகின்றது.

தொடர்ந்து தேடுகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்ததாக வேறு சில ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படத்திலிருக்கும் சம்பவம் கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்தது என்பதும், அண்மையில் டிட்வா புயல் மழையால் நடக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது.
Sources
Report by News Tamil 24X7, dated October 22, 2025