Fact Check
பீகாரில் தேர்தல் முடிவுக்குப்பின் மூத்த காங்கிரஸ் தலைவர் அழுதாரா?
Claim
பீகாரில் தேர்தல் முடிவுக்குப்பின் மூத்த காங்கிரஸ் தலைவர் அழுததாக பரவும் வீடியோ.
Fact
இத்தகவல் தவறானதாகும். வீடியோவில் காணபடுபவர் உ.பி.யின் மக்களவை உறுப்பினர் அவதேஷ் பிரசாத் ஆவார். இவர் சமாஜ்வாடி கட்சியை சார்ந்தவராவார். இவ்வருடம் பிப்ரவரியில் தலித் பெண் ஒருவரின் சடலம் கால்வாய் ஒன்றில் கிடந்தது. அப்பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறி பத்திரிக்கை சந்திப்பில் அழுதார். இச்சம்பவமே திரித்து பரப்பப்படுகின்றது.
பீகாரில் தேர்தல் முடிவுக்குப்பின் மூத்த காங்கிரஸ் தலைவர் அழுததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
பீகாரில் தேர்தல் முடிவுக்குப்பின் மூத்த காங்கிரஸ் தலைவர் அழுததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் வைரலாகும் வீடியோ குறித்து பிப்ரவரி 4, 2025 அன்று பிபிசி தமிழில் “தலித் பெண் படுகொலை: ‘பதவியை ராஜினாமா செய்வேன்’ என கூறிய எம்.பி” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தலித் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கால்வாயில் கிடந்ததை தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று சமாஜ்வாடியை கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் பிப்ரவரி 2, 2025 அன்று மேற்கூறிய அதே தகவலுடன் வைரலாகும் வீடியோ இந்தியா டுடே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் ANI நியூஸ், இந்துஸ்தான் டைம்ஸ், NDTV உள்ளிட்ட ஊடகங்களிலும் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிடிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் மேற்கூறிய தகவலே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
- வாய்க்காலில் மரணித்து கிடந்த தலித் பெண்ணுக்கு நீதி வேண்டியே அவதேஷ் பிரசாத் அழுதார்; பீகார் தேர்தல் முடிவுகளுக்காக அல்ல. டப்பட்டிருந்தது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.
- வைரலாகும் வீடியோவுக்கும் பீகார் தேர்தலுக்கும் தொடர்பில்லை; இச்சம்பவம் பீகார் தேர்தல் நடப்பதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி மாதத்தில் நடந்ததாகும்.
- வைரலாகும் வீடியோவில் இருப்பவர் காங்கிரஸ் தலைவர் அல்ல; அவர் சமாஜ்வாடி கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் ஆவார்.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
பீகாரில் தேர்தல் முடிவுக்குப்பின் மூத்த காங்கிரஸ் தலைவர் அழுததாக பரப்பப்படும் வீடியோ தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by BBC Tamil, dated February 4, 2025
Report by India Today, dated February 2, 2025
Report by ANI News, dated February 2, 2025
Report by Hindustan Times, dated February 2, 2025
Report by NDTV, dated February 2, 2025